Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்

மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்

மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்

மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்

ADDED : பிப் 04, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
* உடல், மனம், நாக்கு இம்மூன்றையும் அடக்கி வாழும் அறிவாளிகளே

உண்மையான அடக்கம் கொண்டவராவர்.

*வாய்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அதில் நம்பிக்கை

கொள்ளுங்கள். அதன் இனிமை கசப்பானது என்று கருதினாலும் அதை உறுதியாக

நம்புவதை மட்டும் கைவிடாதீர்கள்.

* தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும் செயல்புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.

* போரில் ஆயிரம் பேரை அழித்து வெல்பவனை விட

தன்னைத்தானே அடக்கி வென்றவனே உயர்தரமான வெற்றியாளன்.

*புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறிவிடுவதில்லை.

நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளூரக் கனன்று

கொண்டேயிருந்து மனிதனைப் பற்றுகிறது.

* அறிவுக்கூர்மையும், நேர்மையும் உறுதிப்பாடும்

உள்ளவராய் உங்களோடு ஒத்துப்போகக் கூடிய

ஒரு துணை கிடைத்தால் அவரை வழித்துணையாய்க் கொண்டு, அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்.

- புத்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us